கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம்.!

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் கோவையில், நடைபெற்றது. குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் 15.11.2021ல் R.S.புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-

தொடரும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் முடக்கப்படும் குறு சிறு தொழில்கள். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிப்புகள்.



லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம். மூலப்பொருட்கள் விலை ஏற்றம் தடுக்க நடவடிக்கை கோரி ஆண்டு ஒன்று ஆகியும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு 100% சதவீதம் விலை உயர்வு.

உற்பத்தித் துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் உற்பத்தி 50% சதவீதம் குறைப்பு. ஜாப்பாடர்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு விலை உயர்வு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகளைக் கலந்து பேசி குறு சிறு தொழில்களைப் பாதுகாக்க மாநிலம் முழுமையும் குரல் கொடுக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு குறுந்தொழில் முனைவோர் நலன் கருதி தங்கள் வாங்கும் புதிய இயந்திரங்களுக்கு 25% சதவிகிதம் மானியம் வழங்கி வருகிறது தற்போது மானியம் பெற ISO சான்றிதழ் வேண்டும் என்ற புதிய நிர்ப்பந்தம் கொண்டு வந்து உள்ளது.

இந்த புதிய நிர்பந்தால் ஜாப்பாட்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் உதிரிப்பாகங்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் தங்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெற ஆயிரகணக்கான பணம் செலவு செய்து ISO எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெற முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள் தமிழக முதல்வரிடம் ISO பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...