கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம்.!

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் கோவையில், நடைபெற்றது. குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் 15.11.2021ல் R.S.புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-

தொடரும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் முடக்கப்படும் குறு சிறு தொழில்கள். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிப்புகள்.



லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம். மூலப்பொருட்கள் விலை ஏற்றம் தடுக்க நடவடிக்கை கோரி ஆண்டு ஒன்று ஆகியும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு 100% சதவீதம் விலை உயர்வு.

உற்பத்தித் துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் உற்பத்தி 50% சதவீதம் குறைப்பு. ஜாப்பாடர்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு விலை உயர்வு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகளைக் கலந்து பேசி குறு சிறு தொழில்களைப் பாதுகாக்க மாநிலம் முழுமையும் குரல் கொடுக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு குறுந்தொழில் முனைவோர் நலன் கருதி தங்கள் வாங்கும் புதிய இயந்திரங்களுக்கு 25% சதவிகிதம் மானியம் வழங்கி வருகிறது தற்போது மானியம் பெற ISO சான்றிதழ் வேண்டும் என்ற புதிய நிர்ப்பந்தம் கொண்டு வந்து உள்ளது.

இந்த புதிய நிர்பந்தால் ஜாப்பாட்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் உதிரிப்பாகங்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் தங்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெற ஆயிரகணக்கான பணம் செலவு செய்து ISO எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெற முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள் தமிழக முதல்வரிடம் ISO பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது எனக் கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...