குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

குறுகிய கால அவகாசத்தில் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்தபடுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி இந்திரா நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கடலைகார சந்து 72 வார்டு இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 40கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தாங்கள்  இந்திரா நகர் பகுதியில் ரயில்வே சந்திப்பின் பின்புறம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு சிட்டா,பீமா ரசீது,மின் இணைப்பு  என அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 4 வருடங்களாக ரயில்வே நிர்வாகம் விரிவாக்கத்திற்காக  காலி செய்ய நிர்பந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறியவர்கள் இங்கு வசிப்பவர்கள் தாங்கள் சாதாரண தினகூலி மற்றும் நடைபாதை வியாபாரிகள் எனவும் உடனடியாக காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நிர்பந்திப்பதால் தங்களால் மாற்று வீட்டிற்கு முன்தொகை வழங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...