கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல்.!

கோவையில் 2-பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கோவையில் மழை பொழிவு ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாகப் பொதுமக்களுக்குச் சளிக் காய்ச்சல் உபாதைகள் ஏற்பட்டுச் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி கோவை முழுவதும் கிட்டத்தட்ட 64 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...