கோவையில் 2-பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கோவையில் மழை பொழிவு ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாகப் பொதுமக்களுக்குச் சளிக் காய்ச்சல் உபாதைகள் ஏற்பட்டுச் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி கோவை முழுவதும் கிட்டத்தட்ட 64 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கோவையில் மழை பொழிவு ஏற்பட்டது. இந்த மழையின் காரணமாகப் பொதுமக்களுக்குச் சளிக் காய்ச்சல் உபாதைகள் ஏற்பட்டுச் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி கோவை முழுவதும் கிட்டத்தட்ட 64 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.