அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.!

அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. இதில் மாதர், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும்.


கோவை: அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் மரணத்துக்குப் பள்ளி நிர்வாகம் காரணமாக இருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க உடனடியாக அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது மீதான ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அம்மாணவியைக் கண்டிக்கும் நடவடிக்கையில் தலைமை ஆசிரியை ஈடுபட்டுள்ளார்.

அச்சம்பவத்தைக் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ், பள்ளி ஆசிரியரும், குற்றத்திற்குத் துணை போன தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவம், குறித்துக் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், துரித விசாரணை நடத்தி உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். கோவை மாவட்டத்தில், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது, தொடர் கதையாகி வருகிறது.

பல்கலைக் கழக மானியக்குழு வழிகாட்டியுள்ள internal complaints committee (ICC) குழுவை எல்லா கல்வி நிலையங்களிலும் அமைக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மாணவ – மாணவிகளிடம் உண்டாக்கவும் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவிலும் இது போன்ற கண்காணிப்புக்குழு அமைக்கப்படக் கேட்டும்,

அதில் மாதர், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர், வழக்கறிஞர் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம் பெறச்செய்ய வேண்டும். மேலும் இறந்த மாணவி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...