கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்.!

கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 37,346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 5,212 பேர் வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்.

குறைந்தபட்சமாகக் கோவை தெற்கு தொகுதியில் 1,396 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அந்த பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

அல்லது நீக்கல் மற்றும் திருத்தம் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...