கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 37,346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 5,212 பேர் வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்.
குறைந்தபட்சமாகக் கோவை தெற்கு தொகுதியில் 1,396 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அந்த பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
அல்லது நீக்கல் மற்றும் திருத்தம் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்ய 37 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 5,212 பேர் வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர்.
குறைந்தபட்சமாகக் கோவை தெற்கு தொகுதியில் 1,396 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அந்த பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
அல்லது நீக்கல் மற்றும் திருத்தம் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் அடுத்த கட்டமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.