இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் உயிரிழந்த விவகாரம்: குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்!

கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை.


கோவை: கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை நடக்கிறது.

அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளைப் பெங்களூருவில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனர்.

இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் வசித்து வந்தவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்றுச் சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.

இந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...