கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை.
கோவை: கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவரை காவலில் எடுத்து விசாரிக்க 7-நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், நாளை மனு மீதான விசாரணை நடக்கிறது.
அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளைப் பெங்களூருவில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனர்.
இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் வசித்து வந்தவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்றுச் சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
இந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தனர்.
அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளைப் பெங்களூருவில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனர்.
இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் வசித்து வந்தவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்றுச் சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
இந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தனர்.