கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10-க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10-க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10-க்குட்பட்ட கருணாநிதி நகரில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா? தண்ணா் வசதி, மின்சார வசதி உள்ளதா என்பதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ராஜ கோபால் சுன்கரா, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கழிப்பிடத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டுமென அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கழிவுக் கால்வாய் சுத்தம் செய்திட வேண்டும் எனவும், பழுதாகியுள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்து பராமரிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்.மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டினை குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10-க்குட்பட்ட கருணாநிதி நகரில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா? தண்ணா் வசதி, மின்சார வசதி உள்ளதா என்பதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ராஜ கோபால் சுன்கரா, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கழிப்பிடத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டுமென அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கழிவுக் கால்வாய் சுத்தம் செய்திட வேண்டும் எனவும், பழுதாகியுள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்து பராமரிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்.மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டினை குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.