திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி..!

காப்பாற்றச் சென்ற நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி வித்தியாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் பலியானார்.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ் என்ற 3 பேர் சாய ஆலை கழிவு தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் உள்ளே இறங்கி ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறியுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும், நிறுவனத்தின் எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்றச் சென்றுள்ளனர்.

இதில் விஷவாயு அதிகமாக தாக்கி வடிவேலு என்ற நபரும், காப்பாற்றச் சென்ற மேலாளர் தினேஷ் என்ற நபரும் உயிரிழந்தனர். நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் என்கிற 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருந்த நிலையில், தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரன் உயிரை பணயம் வைத்து தொட்டிக்குள் இறங்கி 3 பேரை காப்பாற்றினார்.

இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் ராஜேந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த தலைமையிலான போலீசார் சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இறந்தவர்களின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து, திருப்பூரில் 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாயப்பட்டறையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபரங்கள் சேகரித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...