பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 பேர் கைது - 55 கிலோ பறிமுதல்..!

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பான்மசாலா, குட்கா, போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பான்மசாலா, குட்கா, போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், மக்கினம்பட்டி அமைதி நகரில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து 55 கிலோ பறிமுதல் செய்தனர்.

மேலும், பாலசுப்பிரமணியம், முருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...