கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணி..!

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பேரணி நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக நீதிபதிகள் கலந்து கொண்ட சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் அவர்கள் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு விழாவை ஒட்டி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 75வது வெள்ளி விழாவையொட்டி, 45 நாட்கள் தொடர் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வின் நிறைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில், கோவை மாவட்ட தலைமை நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு கொடியசைத்து சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.



Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...