கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!

கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவராயபுரம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி அம்சவேணி (39), இவர்களுக்கு நிவேதா (19) என்ற மகள் உள்ளார். நிவேதா பொள்ளாச்சியில் உள்ள தனியார் மெடிக்கலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிவேதா கடந்த 12ம்தேதி வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற நிவேதா வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிவேதாவின் தாய் அம்சவேணி புகார் அளித்தார்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...