கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் துவக்கம்..!

மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்த திட்டமிடப்பட்டு இன்று வரை ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டமானது வடகிழக்கு பருவ மழையை எதிர் கொண்டு, மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இன்று காலை 8 மணி முதல் மாலை 8:30 மணி வரை கோவை பேரூராட்சிகள் (சூலூர், கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், அன்னூர், இடுகரை, பள்ளபாளையம், இருகூர், மோப்பிரிப்பாளையம், சர்க்கார்சாமக்குளம், பெரியதாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்) மேற்கு, தெற்கு மற்றும் மத்தி மண்டலங்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...