கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் துவக்கம்..!

மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்த திட்டமிடப்பட்டு இன்று வரை ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார்.

இத்திட்டமானது வடகிழக்கு பருவ மழையை எதிர் கொண்டு, மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், இன்று காலை 8 மணி முதல் மாலை 8:30 மணி வரை கோவை பேரூராட்சிகள் (சூலூர், கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், அன்னூர், இடுகரை, பள்ளபாளையம், இருகூர், மோப்பிரிப்பாளையம், சர்க்கார்சாமக்குளம், பெரியதாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்) மேற்கு, தெற்கு மற்றும் மத்தி மண்டலங்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...