'மக்கள் சபை' நிகழ்ச்சி அனைவரும் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்ய நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள்!

'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: ''மக்கள் சபை'' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் மேலான ஆணைக்கிணங்க, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி 'மக்கள் சபை' மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட மாநகராட்சி பகுதிகளில், தங்களது பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மழை நீர் வடிகால் (சாக்கடை), பாதாளச் சாக்கடை, பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, சுகாதாரம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அரசு சான்றுகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை, மகளிர் குழு கடனுதவி, கல்விக்கடன், சுயதொழில் புரிய கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி “மக்கள் சபை“ மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த 'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13.11.2021, சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை - வார்டுகள் 22,25,80,83,81

14.11.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை - வார்டுகள் 37 மற்றும் 56

15.11.2021, திங்கள்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை - வார்டுகள் 58,57,65,66,67,68,69,75,52,53

இந்த "மக்கள் சபை" நிகழ்ச்சியில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வட்டக்கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி, பொதுமக்களிடம், இந்த “மக்கள் சபை“ நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திப் பயன்பெறுவதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...