'மக்கள் சபை' நிகழ்ச்சி அனைவரும் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்ய நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள்!

'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: ''மக்கள் சபை'' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் மேலான ஆணைக்கிணங்க, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி 'மக்கள் சபை' மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட மாநகராட்சி பகுதிகளில், தங்களது பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மழை நீர் வடிகால் (சாக்கடை), பாதாளச் சாக்கடை, பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, சுகாதாரம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அரசு சான்றுகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை, மகளிர் குழு கடனுதவி, கல்விக்கடன், சுயதொழில் புரிய கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி “மக்கள் சபை“ மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த 'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13.11.2021, சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை - வார்டுகள் 22,25,80,83,81

14.11.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை - வார்டுகள் 37 மற்றும் 56

15.11.2021, திங்கள்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை - வார்டுகள் 58,57,65,66,67,68,69,75,52,53

இந்த "மக்கள் சபை" நிகழ்ச்சியில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வட்டக்கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி, பொதுமக்களிடம், இந்த “மக்கள் சபை“ நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திப் பயன்பெறுவதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...