எதிர்க்கட்சியாக செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தும் பாஜக- ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைப்பதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைப்பதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருமான ER ஈஸ்வரன் கலந்துகொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முயற்சிகளும் இல்லாமல் அறிக்கைகளைக் கொடுத்து, ஊடகங்களில் முக்கியத்துவம் பெற அண்ணாமலை முயற்சி செய்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி தமிழக அரசுக்கு முழுமையாகத் தெரியும், நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் கொண்டவர் கண்டிப்பாகத் தமிழகத்திற்கு ஆதரவான நிலை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அண்ணாமலை போன்றவர்கள் அவசர அவசரமாகச் செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறார். கேரளாவினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

ஜெய் பீம் படம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் போது திரைத்துறையினர், எந்த சமுதாயத்தினரையும் புண்படுத்தாமல் திரைப்படம் எடுக்க வேண்டும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும், சிறிய அளவில் கூட மக்களின் மனம் புண்படும் வகையில் படம் எடுக்கக்கூடாது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தினால்தான் தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...