கோவையில் தங்க நகை வியாபாரியிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் பறிமுதல்!

கோவை வடவள்ளி அருகே தங்க நகை வியாபாரியிடம் 2-கிலோ தங்கம், மற்றும் 7-லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3-பேரை கைது செய்த போலிசார் நகை, பணம் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை வடவள்ளி அருகே தங்க நகை வியாபாரியிடம் 2-கிலோ தங்கம், மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3-பேரை கைது செய்த போலிசார் நகை, பணம் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் அங்கு உள்ள தங்க நகைக் கடைகளைத் தங்கத்தை பெற்று ஹால் மார்க் நகைகளாக மாற்றி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி சண்முகம் ஹால் மார்க் செய்த நகை மற்றும் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தைத் தாக்கி 2-கிலோ தங்க நகை, 7-லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வடவள்ளி போலிசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது வழக்கில் தொடர்புடைய பவானி சிங், அப்துல் ஹக்கீம், அஷ்ரப் அலி, உள்ளிட்ட 7-பேரை கைது செய்தனர்.



இந்நிலையில் கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலிசார் பாஷா, சம்சுதீன், அன்பரசன் ஆகிய மூன்று பேரை போலிசார் கைது செய்து அவர்களிடமிருந்த 212 சவரன் தங்க நகைகள், 5.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



முதல் கட்ட விசாரணையில் சண்முகம் ஹால்மார்க் செய்ய நகைகளை கொடுக்கும் கடையில் வேலை பார்த்து வந்த பவானி சிங், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளியான பாஜா என்கிற சிக்கந்தர் பாஷாவுடன் திட்டம் தீட்டி சண்முகத்திடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.



இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறும் போது:- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா இப்போது காய்கறி கடை வைத்திருப்பதாகவும், பவானி சிங் கொடுத்த தகவல் அடிப்படையில் திட்டமிட்டு கொள்ளையை அறங்கேற்றியது தெரியவந்தது.

மேலும் அதிக பணம் நகைகளை எடுத்துச் செல்லும் வியாபாரிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கரங்களில் எடுத்து செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்படை போலிசார் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திறமையாக கையாண்டு 10-பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2-பேர் தலைமறைவாக உள்ளனர் என தெரிவித்தார்.



சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு ஐ.ஜி சுதாகர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...