கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.
டெங்குகாய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை ஆகையால் நல்ல நீர் தேங்கும் வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.33-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாகவும், டெங்குகாய்ச்சல் பரப்பக் காரணமாக இருந்ததாலும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.
டெங்குகாய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை ஆகையால் நல்ல நீர் தேங்கும் வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.33-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாகவும், டெங்குகாய்ச்சல் பரப்பக் காரணமாக இருந்ததாலும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.