கோவை மாநகராட்சிக்கு கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளை சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ உத்தரவின்‌ படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட இராமநாதபுரம்‌ சந்திப்பு, திருச்சி சாலை, ஓலம்பஸ்‌, ஸ்டேட்‌ பேங்க்‌ ரோடு, நஞ்சுண்டா புரம்‌, கிருஷ்ணசாமி சாலை பாலம்‌ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்யும்‌ பணிக்குக் கழிவுகளைத் தூர்வாருவதற்கு சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தகவல்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்‌ படி, மாநகராட்சி பகுதிகளில்‌ மழைநீர்‌ வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்வதற்கும்‌ ஆளிறங்கு புழைகளில்‌ சேகரமாகியுள்ள கழிவுகளைத் தூர்வாருவதற்கும்‌ அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வாகனம்‌ அதிக நீரேற்று திறன்‌ கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டா உறிஞ்சும்‌ திறன்‌ கொண்டது. மேலும்‌, 140 பார்‌ அலகு அழுத்தத்தில்‌ நிமிடத்திற்கு 480 லிட்ட்‌ வேகத்தில்‌ நீரைச் செலுத்தும்‌ திறன்‌ அடைப்பு நீக்கி (Jet Rodding) கொண்ட வாகனம்‌. மேலும்‌, இவ்வாகனத்தில்‌ சேகரமாகும்‌ கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும்‌ அமைப்பினை கொண்டுள்ளது.

தற்போது இராமநாதபுரம்‌ சந்திப்பு, திருச்சி சாலை, ஓலம்பஸ்‌, ஸ்டேட்‌ பேங்க்‌ ரோடு, நஞ்சுண்டாபுரம்‌, கிருஷ்ணசாமி சாலை போன்ற மாநகராட்சியின்‌ முக்கிய பகுதிகளில்‌ உள்ள மழைநீர்‌ வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைத் தூர்வாரும்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இராமநாதபுரம்‌ சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்தல்‌ மற்றும்‌ இந்த பாலத்தில்‌ சேகரமாகியுள்ள குப்பைகள்‌ மற்றும்‌ மணல்‌ திட்டுகளை அப்புறப்படுத்துதல்‌ போன்ற பணிகளுக்கு இந்த வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ போர்க்கால அடிப்படையில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மற்றும்‌ அடைப்புகள்‌ சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை மாநகராட்சி துணை ஆணையர்‌, உதவி ஆணையார்கள்‌, மாநகராட்சி பொறியாளர்கள்‌, இதர பணியாளர்கள்‌ ஆகியோர்‌ போர்க்கால அடிப்படையில்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77 செல்வபுரம்‌ இராமமூர்த்தி சாலையில்‌ மழையினால்‌ ஏற்பட்ட குழிகளில்‌ ஈர கலவை கொண்டு பராமரிப்பு பணிகள்‌ நடைபெற்றது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...