பொள்ளாச்சி அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர் டீ காலனியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகள் இந்துமதி (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டதால், அவரை திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்களிடம் இந்துமதி சம்மதம் கேட்டதாகத் தெரிகிறது.
தன்னுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் அவரை பணிக்கு அனுப்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த இந்துமதி நேற்று இரவு அறைக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, தகவலின் அங்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர் டீ காலனியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகள் இந்துமதி (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டதால், அவரை திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்களிடம் இந்துமதி சம்மதம் கேட்டதாகத் தெரிகிறது.
தன்னுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் அவரை பணிக்கு அனுப்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த இந்துமதி நேற்று இரவு அறைக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, தகவலின் அங்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.