பொள்ளாச்சியில் மின்சாரம் தாக்கி பள்ளி வாகன உதவியாளர் உயிரிழப்பு!

பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழைகொம்பு நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (47). இவர் திவான்சா புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வாகனத்தின் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை குழந்தைவேலு வழக்கம் போல் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளி உரிமையாளரின் வீட்டுக்குச் சென்றவர் வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் மண்தரையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

குழந்தைவேலுவின் மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னகாமணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...