பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழைகொம்பு நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (47). இவர் திவான்சா புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வாகனத்தின் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை குழந்தைவேலு வழக்கம் போல் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளி உரிமையாளரின் வீட்டுக்குச் சென்றவர் வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் மண்தரையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
குழந்தைவேலுவின் மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னகாமணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழைகொம்பு நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (47). இவர் திவான்சா புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வாகனத்தின் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை குழந்தைவேலு வழக்கம் போல் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளி உரிமையாளரின் வீட்டுக்குச் சென்றவர் வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் மண்தரையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
குழந்தைவேலுவின் மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னகாமணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.