சிக்கலாம்பாளையம் பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதமாக ரூ. 40 ஆயிரம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் கிணத்துக்கடவு அடுத்துள்ள சிக்கலாம்பாளையத்தில் இருந்து வீரப்பகவுண்டனூர் செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனையிட்டு ஆய்வு செய்ததில், அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, 2 லாரிகளுக்கும், 40 ஆயிரத்து 40 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள் அபராத தொகையை காவல் நிலையத்தில் செலுத்தியதும் லாரி உரிமையாளர்களிடம் லாரிகள் ஒப்படைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் கிணத்துக்கடவு அடுத்துள்ள சிக்கலாம்பாளையத்தில் இருந்து வீரப்பகவுண்டனூர் செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனையிட்டு ஆய்வு செய்ததில், அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, 2 லாரிகளுக்கும், 40 ஆயிரத்து 40 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள் அபராத தொகையை காவல் நிலையத்தில் செலுத்தியதும் லாரி உரிமையாளர்களிடம் லாரிகள் ஒப்படைக்கப்பட்டது.