கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ மாதிரி வாக்குப்பதிவு..!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற இந்த வாக்குப்பதிவை மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா நேரில்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம்‌ கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களின்‌ முன்னிலையில்‌ கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்தில்‌ உள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகள்‌ நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா அவர்கள்‌ இன்று (12.11.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம்‌ கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களின்‌ முன்னிலையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகள்‌ தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களின்‌ மொத்த Ballot Unit - 6618 எண்ணிக்கையிலும்‌, Control Unit - 3332 எண்ணிக்கையிலும்‌ தற்போது வந்துள்ளது.

இதில்‌ 5 சதவீதம்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்‌ BELL நிறுவன பொறியாளர்கள்‌ 10 நபர்கள்‌ பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்து வருகின்றனர்‌.

இந்நிகழ்வில்‌ உதவி ஆணையாளர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (ஊரக உள்ளாட்சி தேர்தல்‌) வி.சந்தானம்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...