கோவையில் நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்..!

நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரை கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்‌ வெற்றிகரமாகக் காப்பாற்றினர்.


கோவை: கோவையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரை கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்‌ வெற்றிகரமாகக் காப்பாற்றி உள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு பகுதியை சேர்ந்த ஞானமுத்து கேத்திரினால்‌ வின்‌ வயது (53), இவரது கணவர்‌ பெயர்‌ லாரன்ஸ்.

இவர் கடந்த அக்டோபர் 20 அன்று காலை 11.21 மணியளவில்‌ கூர்மையான ஆயுதத்தினால்‌ நெஞ்சில்‌ ஏற்பட்ட காயங்களுடன்‌ கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஆபத்தான நிலையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌.

இதையடுத்து, அவருக்குத் தேவையான பரிசோதனைகள்‌ எல்லாம்‌ செய்யப்பட்டு அவசர இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில்‌ அவரது இருதய பகுதியில்‌ இருந்த கூர்மையான ஆயுதம்‌ எடுக்கப்பட்டது.

அப்போது, அந்த கூர்மையான ஆயுதம்‌, வலது பக்க இதயத்தைக் காயப்படுத்தி இருப்பதும், உதரவிதானம்‌ பகுதியில்‌ காயம்‌ ஏற்படுத்தி இருப்பதும்‌ மற்றும்‌ இதயத்தைச் சுற்றியுள்ள ஜவ்வு அறையில்‌ ஏறக்குறைய சுமார்‌ 300 ml இரத்தம்‌ இருப்பதும்‌ கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, இதயத்தில்‌ உள்ள காயம்‌, உதரவிதானத்தில்‌ உள்ள காயம்‌ ஆகியவை சரிசெய்யப்பட்டது. இதயத்தைச் சுற்றியுள்ள ஜவ்வு அறையில்‌ இருந்த சுமார்‌ 300 ml இரத்தம்‌ வெளியே எடுக்கப்பட்டது. இது உயிர்‌ காக்கும்‌ செயல்கள்‌ ஆகும்‌. இல்லையெனில்‌ நோயாளி இறந்து விடுவார்.

இந்த அறுவை சிகிச்சையானது மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ பேராசிரியர்‌ M. நிர்மலா., Ms., DGO அவர்கள்‌ முன்னிலையில்‌ கீழ்க்கண்ட மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்‌.



இந்த குழுவில், பேராசிரியர்‌ மயக்கவியல்‌ துறை தலைவர்‌ கல்யாண சுந்தரம்‌, இருதய அறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியர்‌ சிவன் ராஜ், இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ முகமத்‌ மின்னதுல்லாஹ்‌, இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ இளவரசன், இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ அரவிந்த், மயக்கவியல்‌ உதவி பேராசிரியர்‌ சந்திரகலா, செவிலியர்கள்‌ பொற்கொடி மற்றும்‌ கிருத்திகா ஆகியோர்கள்‌ உள்ளனர்‌.

இந்த அறுவை சிகிச்சையானது முதல்வர்‌ காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ முற்றிலும்‌ இலவசமாக செய்யப்பட்டது. தற்போது நோயாளி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...