வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை வனப்பகுதிக்கு விரட்டி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.



மேலும், கேரளா வனப்பகுதி எல்லை உள்ளதால் காட்டு யானை கூட்டங்கள் வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நியாயவிலை கடைகளில் உள்ள ரேஷன் அரிசி சேதப்படுத்துகிறது.

இந்த நிலையில், நல்லமுடி, ஆனைமுடி பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்து ரேஷன் கடையை இடித்துத் தள்ளியது.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் யானைக்கூட்டம் புகுந்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...