கோவையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை..!

வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பூபதி ஆகிய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்கிய வாலிபர்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அண்ணாநகரை சேர்ந்தவர் பூபதி (25), அஜித் (27). இவர்கள் கடந்த 7.9.2015- அன்று திருச்சி சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது, அந்த வழியாக அரசு டவுன் பேருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து மீது பூபதி, அஜித் ஆகிய 2 பேரும் கல் வீசினர். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பூபதி, அஜித் ஆகியோரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பூபதி ஆகிய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...