நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்தது அம்பலம்.
கோவை: பல நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி வந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், இருசக்கர வாகனங்களை குறிவைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நீலாம்பூர், சிங்காநல்லூர், சிந்தாமணிபுதூர் ஜங்சன், கிணத்துக்கடவு , கோவை கடை வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக, சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அந்த நால்வரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த முரளி, ஷாருக்கான், யாசர் முசாபத், ரசூல் என்பதும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவது இவர்களது வழக்கமான தொழில் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நால்வரிடமும் இருந்து இதுவரை ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நான்கு இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நீலாம்பூர், சிங்காநல்லூர், சிந்தாமணிபுதூர் ஜங்சன், கிணத்துக்கடவு , கோவை கடை வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக, சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த நால்வரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த முரளி, ஷாருக்கான், யாசர் முசாபத், ரசூல் என்பதும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவது இவர்களது வழக்கமான தொழில் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நால்வரிடமும் இருந்து இதுவரை ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நான்கு இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.