விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த போத்தனூரை சேர்ந்த 4 பேர் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்தது அம்பலம்.


கோவை: பல நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி வந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், இருசக்கர வாகனங்களை குறிவைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நீலாம்பூர், சிங்காநல்லூர், சிந்தாமணிபுதூர் ஜங்சன், கிணத்துக்கடவு , கோவை கடை வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக, சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



விசாரணையில், அந்த நால்வரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த முரளி, ஷாருக்கான், யாசர் முசாபத், ரசூல் என்பதும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவது இவர்களது வழக்கமான தொழில் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நால்வரிடமும் இருந்து இதுவரை ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நான்கு இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...