சிங்காநல்லூரில் பின்னால் வந்த லாரி மோதி விவசாயி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: சிங்காநல்லூரில் பின்னால் வந்த லாரி மோதி விவசாயி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்தவர் உதயகுமார் வயது 53, விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கோவை திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதை பார்த்த உதயகுமார் மோட்டார் சைக்கிளை காரின் பின்னால் நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்தவர் உதயகுமார் வயது 53, விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கோவை திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதை பார்த்த உதயகுமார் மோட்டார் சைக்கிளை காரின் பின்னால் நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.