பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி சார் ஆட்சியரிடம் மனு.!

தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தில் காக்கா கொத்தி பாறையில் இரவலர் இனத்தைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக இருந்து வருகின்றனர்.

தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்ததாகவும், தங்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், மனு பரிசீலித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மலைவாழ் மக்களிடம் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனுக்களாக ஆனைமலை தாசில்தரிடம் தர வலியுறுத்தினர். விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...