கோவை ஐ.என்.எஸ். அக்ரானிக்கு தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி வருகை!

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ஏ.கே.சாவ்லா வருகை புரிந்தார்.


கோவை: கோவையில் உள்ள ஐ.என்.எஸ்.அக்ரானி தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ஏ.கே.சாவ்லா வருகை புரிந்தார்.

அப்போது அவர், மாலுமிகளின் கௌரவ மரியாதையைப் பெற்றுக் கொண்டதுடன், ஐ.என்.எஸ்.அக்ரானியின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.



பின்னர் அக்ரானியில் "நொய்யல்" மற்றும் "பழமுதிர் தோட்டம்" நிலைய கழிவு மேலாண்மை ஆலையைத் திறந்து வைத்தார்.

மேலும் இவர் பாதுகாப்பு சிவிலியன் ஊழியர்கள் உட்படக் கடற்படை வீரர்களுடன் உரையாடியதுடன் இந்தியக் கடற்படையின் மாலுமிகளுக்குத் தலைமைத்துவ மற்றும் மேலாண்மை திறன்களை வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.



தெற்கு மண்டல கடற்படை மனைவிகள் நலச்சங்கத் தலைவர் சபனா சாவ்லா, கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் "ஓயாசிஸ்" என்ற ஆரோக்கிய பூங்காவைத் திறந்து வைத்ததுடன் நிலையத்தின் அனைத்து பெண்களுடனும் உரையாடினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...