'பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு எதிர்ப்பு: பள்ளியை முற்றுகையிட்ட பாஜகவினர்.!

பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டனர்.



திருப்பூர்: பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நூலகத்திற்குப் புத்தகம் தேவை என்று விளம்பரம் அளிக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தைக் கண்டு தனிநபர் ஒருவர் தந்தை பெரியார் எழுதிய பெண்கள் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தைப் பள்ளி நூலகத்திற்கு, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி அவர்களிடம் வழங்கினார்.



அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் சில மாணவிகளுக்கு அந்த புத்தகம் வழங்கப்பட்டது, அந்த புத்தகத்தில் பெண்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது அணிதி போன்ற தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளதுடன், இந்து மதத்தை இழிவாகவும், இந்து பெண்களைத் தரக்குறைவாகவும் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி விநியோகித்த புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற புத்தகங்களைப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கக்கூடாது என்றும் பாஜகவினர் தலைமை ஆசிரியையிடம் கேட்டுக்கொண்டனர்.



இதுகுறித்து தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி தெரிவிக்கையில், ஒரு தனிநபர் நூலகத்திற்கு இந்த புத்தகங்களை வழங்கினார். அதைப் படிக்காமல் சில மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விநியோகித்த அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெறுவதாகவும் மீதமுள்ள அனைத்து புத்தகங்களையும் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பள்ளி பரபரப்பாகக் காணப்பட்டது.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...