குன்னூரில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும்- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



நீலகிரி: குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேட்டி, மழையால் மண்சரிவு ஏற்பட்ட தொட்டபெட்டா சாலையையும் ஆய்வு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாகக் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.



இந்நிலையில் குன்னூரில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரேலிய மற்றும் பந்துமை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இருப்பினும் அணை முகப்பு வாயிலில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாகத் தண்ணீர் வெளியேறி வருகிறது.



இதற்குத் தீர்வு காணும் வகையில் நகராட்சி அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் நேரில் ரேலிய அணையை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குன்னூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ரேலியா அணை அருகே புதிதாக நீரைத் தேக்கி வைக்க 90 கோடி செலவில் புதிதாக 2 தடுப்பு அணைகளைக் கட்டவும், சேதமடைந்துள்ள ரேலியா அணையைச் சீர் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, தற்போது சுற்றுலாப் பயணிகள் அனுமதியின்றி தொட்டபெட்டா சாலை மூடப்பட்டுள்ளது.



வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா மலைச் சிகரத்தைக் கண்டு ரசிக்கவும், அப்பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஒரு மாதத்திற்குள் தொட்டபெட்டா சாலையை 15 லட்சம் செலவில் சரி செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

நாளை முதல் நீலகிரியில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...