வாலாங்குளம்‌ முதல்‌ பழைய சுங்கம்‌ வரை நடந்து சென்று மாவட்ட ஆட்சியர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு!

கோவை‌ மாவட்ட ஆட்சியர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ வாலாங்குளம்‌ முதல்‌ பழைய சுங்கம்‌ வரை சுமார்‌ 2 கிலோ மீட்டர்‌ நடந்து சென்று ஆய்வு செய்தனர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வாலாங்குளம்‌, பழைய சுங்கம்‌ மற்றும்‌ இராமநாதபுரம்‌ சந்திப்பு ஆகிய பகுதிகளில்‌ மாவட்ட ஆட்சியர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ நேரில்‌ சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆகியோர்‌ வாலாங்குளம்‌ முதல்‌ பழைய சுங்கம்‌ வரை சுமார்‌ 2 கிலோ மீட்டர்‌ நடந்து சென்று ஆய்வு செய்தார்கள்‌.



அதன்‌ பின்னர்‌, இராமநாதபுரம்‌ சந்திப்பு மற்றும்‌ ரவுண்டானா பகுதிகளிலும்‌ இன்று (10.11.2021) நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்ததாவது, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வார்டு எண்‌.73, 68, 67, 69 ஆகிய பகுதிகளில்‌ திருச்சி சாலையில்‌ அமைந்துள்ள மழைநீர் வடிகாலில்‌ உபரிநீர் வெளியேற்றப்பட்டுவரும்‌ பொழுது வாய்க்காலில்‌ போதிய அளவு இல்லாததால்‌ வெள்ளநீர்‌ சாலையில்‌ வழிந்தோடுகிறது.

தற்போது இரவு பகல்‌ பார்க்காமல்‌ மாநகராட்சி பொறியாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ மாநகராட்சி பகுதியில்‌ வழிந்தோடும்‌ வெள்ளநீரை நஞ்சுண்டாபுரம்‌ சாலை வழியாக நொய்யல்‌ ஆற்றை தொடுவதற்கு ஏதுவாக இராமநாதபுரம்‌ சந்திப்பில்‌ பாதாள சாக்கடை குழாய்கள்‌ அமைத்து இணைப்பு ஏற்படுத்தியுள்ளனர்‌.

தற்போது இராமநாதபுரம்‌ சிக்னலில்‌ இருந்து கிழக்கு நோக்கி சங்கனூர்‌ பள்ளம்‌ வரை சாலையில்‌ எந்த வெள்ளநீரும்‌ நிறைந்து ஓடாமல்‌ மழைநீர்‌ வடிகாலில்‌ செல்ல ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு தொடர்ந்து போலீஸ்‌ கந்தசாமி சந்திப்பிலிருந்து இராமநாதபுரம்‌ சிக்னல்‌ வரை வெளிவரும்‌ வெள்ளநீரை அப்புறப்படுத்தும்‌ பணியையும்‌ துரிதமாக நடைபெற்றுவருகிறது.'” என மாவட்ட ஆட்சியர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌ தெரிவித்தார்‌.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்‌ பயிற்சி சரண்யா, மாநகர காவல்‌ துணை ஆணையார்கள்‌ ஜெயச்சந்திரன்‌, உமா, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ ஆர்‌.சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, உதவிப் பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...