கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த திருநங்கையான உமாஸ்ரீயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலா்பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த உமாஸ்ரீ (30). திருநங்கையான இவா் தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இவரது செல்ஃபோன் சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது. இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவலா் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவா் விசாரித்தாா். திருட்டு குறித்து விசாரிப்பதற்காக திருநங்கையின் வீட்டுக்குச் சென்ற அவா், அவரிடம் தகாத வாா்த்தைகளில் பேசியது மட்டுமல்லாமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட காவலா் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த உமாஸ்ரீ (30). திருநங்கையான இவா் தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இவரது செல்ஃபோன் சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது. இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவலா் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவா் விசாரித்தாா். திருட்டு குறித்து விசாரிப்பதற்காக திருநங்கையின் வீட்டுக்குச் சென்ற அவா், அவரிடம் தகாத வாா்த்தைகளில் பேசியது மட்டுமல்லாமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட காவலா் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.