குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம்: பொள்ளாச்சியில் விழிப்புணர்வு!

பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்து போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ- மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்தும் சமுதாயத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வது எனவும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெப்ஃலா மற்றும் தலைமை காவலர் சுமிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...