திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி!

திருப்பூர் மாவட்டத்தில், நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாக, திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி இன்று நடந்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாக, திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,512 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து, 68 ஆயிரத்து, 682 ஆண்கள், 11 லட்சத்து, 97 ஆயிரத்து, 236 பெண்கள், 293 திருநங்கைகள் என, 23 லட்சத்து, 66 ஆயிரத்து, 211 வாக்காளர் உள்ளனர்.

விரைவில், நகர உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான பட்டியலை தயாரிக்க, தேர்தல் பிரிவினர் களமிறங்கியுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை முடிக்க இருக்கின்றனர். பட்டியல் தயாரானதும், அதன் அடிப்படையில் ஓட்டுச்சாவடிகள் அமைவிடம் குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள் 16 பேரூராட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், வேட்புமனு தாக்கலை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 16 பேரூராட்சிகளில், 246 வார்டுகள் உள்ளன. அவற்றில், 259 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.



அவற்றில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.



ஓட்டுப்பதிவு இயந்திரங்களின், செயல்திறனைச் சரிபார்க்கும் முகாம் இன்று நடந்தது. 'பெல்' நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திரங்களையும் சரிபார்த்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...