கோவையில் உரிமம் புதுப்பிக்காத 58-மதுபான பார்கள் மூடல்.!

கோவை மாவட்டத்தில் உரிமம் நீட்டிப்பு பெறாமல் செயல்பட்ட, 58-மதுபான பார்கள் மூடப்பட்டன. உரிமம் பெற்ற பின் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உரிமம் நீட்டிப்பு பெறாமல் செயல்பட்ட, 58 'டாஸ்மாக்' மதுக்கடை பார்கள் மூடப்பட்டன.

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர பகுதியில், 41- டாஸ்மாக் கடைகளும், புறநகர் பகுதியில், 74-கடைகளும் என, மொத்தம், 115- கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளின் அருகே தனியார் மூலம் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாதங்களாக மூடிக்கிடந்த டாஸ்மாக் பார்கள் கடந்த, 1ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் துவங்கின.

இந்நிலையில், பெரும்பாலான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உடனே உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் அளித்த காலக்கெடுவுக்குள், 58 டாஸ்மாக் பார்களின் உரிமம் நீட்டிக்கப்படவில்லை.

இதையடுத்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், உரிமம் இல்லாமல் செயல்பட்ட, 58 பார்களை அதிகாரிகள் மூடினர். உரிமம் பெற்ற பின் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...