கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய காலிங்கராயன் குளம் - பொதுமக்கள் மகிழ்ச்சி..!

இந்த குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு காலிங்கராயன் குளம் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளம் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த குளத்தை இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் தூர்வாருதல், நீர்வழித்தடத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்களங்கள் நிறைந்துள்ளன.



இந்த நிலையில், துடியலூர், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காலிங்கராயன் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்துள்ள இக்குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...