இந்த குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு காலிங்கராயன் குளம் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளம் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குளத்தை இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் தூர்வாருதல், நீர்வழித்தடத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்களங்கள் நிறைந்துள்ளன.

இந்த நிலையில், துடியலூர், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காலிங்கராயன் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்துள்ள இக்குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளம் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குளத்தை இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் தூர்வாருதல், நீர்வழித்தடத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்களங்கள் நிறைந்துள்ளன.
இந்த நிலையில், துடியலூர், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காலிங்கராயன் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்துள்ள இக்குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.