கோவையில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் கணவன், மனைவி கைது...!

பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் மற்றும் அவரது மனைவி சுருதி கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி நாச்சிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (76). கடந்த 2ம் தேதி மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் துணிகாயப் போட்டுக் கொண்டு இருந்தார்.

இதனையடுத்து, ஒரு ஆணும், பெண்ணும் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களிடம் ஜெயலட்சுமி யார் என்று கேட்பதற்குள், 2 பேரும் அந்த மூதாட்டியை கீழே தள்ளினர்.

மேலும், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்ததாக தெரிகிறது. இதையடுத்து, ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த நேரத்தில் 2 பேர் மட்டும் நடந்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் (21), அவரது மனைவி சுருதி (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது திருடியதை ஒப்புக் கொண்டனர்.

மேலும், கடன் தொல்லை மற்றும் தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால், மூதாட்டி ஜெயலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...