பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை: கோவையில் பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் பிந்து இன்ஜினியர். இவருடைய மனைவி ஆதிரா. கடந்த 15.10.2013 அன்று பிந்து மைசூருக்கு சென்றதால் ஆதிரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில், அன்று இரவு 10 மணி அளவில் வீட்டின் அழைப்பு மணி ஒழிப்பு கேட்டது. உடனே கதவைத் திறந்து பார்த்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த வாலிபர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஆதிராவிடம் நகையை கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஆதிராவின் கழுத்தை அறுத்து விட்டு கத்தியால் குத்திவிட்டு சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிராவிடம் நகை பறித்தது தொடர்பாக கோவை மரக்கடையைச் சேர்ந்த அரவிந்த் குமார் (27) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணபிரியா அரவிந்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அரவிந்த்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் பிந்து இன்ஜினியர். இவருடைய மனைவி ஆதிரா. கடந்த 15.10.2013 அன்று பிந்து மைசூருக்கு சென்றதால் ஆதிரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில், அன்று இரவு 10 மணி அளவில் வீட்டின் அழைப்பு மணி ஒழிப்பு கேட்டது. உடனே கதவைத் திறந்து பார்த்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த வாலிபர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஆதிராவிடம் நகையை கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஆதிராவின் கழுத்தை அறுத்து விட்டு கத்தியால் குத்திவிட்டு சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிராவிடம் நகை பறித்தது தொடர்பாக கோவை மரக்கடையைச் சேர்ந்த அரவிந்த் குமார் (27) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணபிரியா அரவிந்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அரவிந்த்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.