கோவையில் திருநங்கைக்கு காவலர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பந்தய சாலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கோவையை சேர்ந்த திருநங்கை ஒருவர் செல்போன் தொலைந்து போனது குறித்து பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புகாரை விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்ற காவலர் மூவேந்தன் வேல்பாரி (PC) என்பவர் திருநங்கையை தரக்குறைவாக பேசியதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.