கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய 48 குடும்பங்களை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய 48 குடும்பங்களை காலி செய்ய வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 960 வீடுகள் கட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்படுகின்றன.

தற்போது இங்குள்ள பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. 400க்கும் குறைவான வீடுகளில் மட்டும் மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இந்த நிலையில், கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சிங்காநல்லுர் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ இளங்கோ தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்கள் கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் 48 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தற்காலிகமாக அந்த வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களில் குடி இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 960 வீடுகள் கட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்படுகின்றன.
தற்போது இங்குள்ள பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. 400க்கும் குறைவான வீடுகளில் மட்டும் மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இந்த நிலையில், கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சிங்காநல்லுர் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ இளங்கோ தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அவர்கள் கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் 48 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தற்காலிகமாக அந்த வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களில் குடி இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.