தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தடகளப் போட்டிகள் நடைபெறும் தேதி வருகிற 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த தடகளப் போட்டிகள் மழையின் காரணமாக வருகிற 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தடகள சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட அளவில் ஜூனியர் தடகளப் போட்டிகள் இன்று (9ம் தேதி) செவ்வாய்க்கிழமை, நாளை (10ம் தேதி) புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவையில் தற்போது மழை பெய்து வருவதால் தடகளப் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த தடகளப் போட்டிகள் நடைபெறும்.
இந்த போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 12, 14, 16, 18, 20, ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட அளவில் ஜூனியர் தடகளப் போட்டிகள் இன்று (9ம் தேதி) செவ்வாய்க்கிழமை, நாளை (10ம் தேதி) புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவையில் தற்போது மழை பெய்து வருவதால் தடகளப் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த தடகளப் போட்டிகள் நடைபெறும்.
இந்த போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.
இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 12, 14, 16, 18, 20, ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.