கோடநாடு கொலை வழக்கு: ஒரே நாளில் 3-விசாரணை.. பரபரப்பாக இருந்த ஊட்டி நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.


நீலகிரி: கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணை மூன்றாவது மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையின் தரப்பில் கேட்கப்பட்ட கூடுதல் கால அவகாசத்தை அளித்து, வருகின்ற 26-ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா‌.

முக்கிய வழக்கு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டாலும், கொடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் இதர மனுக்கள் மீதான விசாரணை ஊட்டியில் இன்று நடைபெற்றது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இந்த வழக்கின் 11 மற்றும் 12-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

சென்னை மழை வெள்ளம் காரணமாக கொடநாடு வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிக்கப்பட்டது.

அதேபோல, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகின்ற 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து கொடநாடு வழக்கின் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் வாளையாறு மனோஜுக்கு, கடந்த ஜூலையில் ஜாமீன் வழங்கப்பட்டும், சில நிபந்தனைகளால் சிறையிலிருந்து வெளி வர முடியாமல் இருக்கிறார்.

மனோஜின் ஜாமீன் நிபந்தனையை மேலும் தளர்த்த வேண்டும் என மனோஜ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இந்த நிலையில், தனபால், ரமேஷ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதால், போலீஸார் இருவரையும் கூடலூர் கிளைச் சிறையிலிருந்து அழைத்து வந்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி இருவருக்கும் மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் கூடலூர் கிளைச் சிறைக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...