மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2400-கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 120-அடியை எட்டியது.

இதனையடுத்து, ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி 11-மதகுகள் வழியாக வினாடிக்கு 2400-கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2400-கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 120-அடியை எட்டியது.
இதனையடுத்து, ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி 11-மதகுகள் வழியாக வினாடிக்கு 2400-கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.