கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி: கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெயலட்சுமி (76). கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி தனியாக வீட்டில் இருக்கும் சமயத்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் சேர்ந்து மூதாட்டியைத் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11-பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.
இதுகுறித்து ஜெயலட்சுமியின் மகன் சங்கரேஸ்வரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், போலீசார் நேற்று முன்தினம் மோதிரம் புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்த தம்பதியினரான சஞ்சய் (21), சுருதி (20) என்பது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் சஞ்சய் மற்றும் சுருதி ஆகிய இருவரும் அதே வீதியில் வசிக்கும் மூதாட்டி ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டதும் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெயலட்சுமி (76). கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி தனியாக வீட்டில் இருக்கும் சமயத்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் சேர்ந்து மூதாட்டியைத் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11-பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.
இதுகுறித்து ஜெயலட்சுமியின் மகன் சங்கரேஸ்வரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், போலீசார் நேற்று முன்தினம் மோதிரம் புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்த தம்பதியினரான சஞ்சய் (21), சுருதி (20) என்பது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் சஞ்சய் மற்றும் சுருதி ஆகிய இருவரும் அதே வீதியில் வசிக்கும் மூதாட்டி ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டதும் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.