பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் 11-பவுன் நகை பறிப்பு: தம்பதியினர் கைது!

கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெயலட்சுமி (76). கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி தனியாக வீட்டில் இருக்கும் சமயத்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் சேர்ந்து மூதாட்டியைத் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11-பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து ஜெயலட்சுமியின் மகன் சங்கரேஸ்வரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், போலீசார் நேற்று முன்தினம் மோதிரம் புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்த தம்பதியினரான சஞ்சய் (21), சுருதி (20) என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் சஞ்சய் மற்றும் சுருதி ஆகிய இருவரும் அதே வீதியில் வசிக்கும் மூதாட்டி ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டதும் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...