கோவையில் நீரில் மூழ்கிய பாலம்: உயர்மட்ட பாலம் கட்ட பழங்குடியின மக்கள் கோரிக்கை!

தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறுமுகை அருகே பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 4-கிராம பழங்குடியின மக்கள் உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிறுமுகை அருகே பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 4-கிராம பழங்குடியின மக்கள் உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரத்தில் இருந்து வனப்பகுதியை ஒட்டி காந்தவயல், மொக்கை மேடு, ஆலூர், உளியூர் உள்ளிட்ட 4-பழங்குடியின கிராமங்களுக்குச் செல்ல கடந்த அதிமுக ஆட்சியின் போது காந்தவயல் பகுதியில் 20-அடி உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது.



தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பழங்குடியின கிராமங்களுக்குச் செல்லும் உயர்மட்ட பாலமானது முழுவதுமாக நீரில் மூழ்கியது.

மேலும், இக்கிராமங்களைச் சுற்றிலும் சுமார் 2-ஆயிரம் ஏக்கரில் வாழை உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களின் விவசாயமும் நடைபெற்று வந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும், இக்கிராமங்களிலிருந்தும் வருவோர் இச்சாலையில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வர்.

பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் விவசாய விளை பொருட்களைப் பரிசல் மூலமாகப் பணம் கொடுத்து மிகவும் சிரமப்பட்டு விற்பனைக்காக எடுத்து வந்தனர். மேலும், இக்கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறுமுகை பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பிரசவம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்காகவும் சிறுமுகைக்கு வர இந்த பரிசல் பயணத்தையே நம்பி ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நம்பி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 105-அடியில் 103-அடியை எட்டியுள்ளதால் காந்தவயல், மொக்கை மேடு, ஆலூர், உளியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்குச் செல்லும் சாலையும் தற்போது நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் பரிசல் மற்றும் மோட்டார் படகு மூலம் சென்று வருகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு அரசு தற்போது பொள்ளாச்சி ஆழியாறு பகுதியிலிருந்து ஓட்டை, உடைசல் படகை இப்பகுதி வசதிக்காக வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர் மட்ட பாலப்பணிகளை விரைவில் துவக்கி தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...