கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே பேரிடர் காலம் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது குறித்தும், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் செயல்படுவது குறித்தும் கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து மற்றும் சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் ஆகியோர் பேரிடர் காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது குறித்தும், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் செயல்படுவது குறித்தும் கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சி பகுதியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து மற்றும் சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் ஆகியோர் பேரிடர் காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.