மேலும், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெற்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் அன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார்களை மனுவாக அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று குறை தீர்க்கும் நாள் முகாமில், பொது மக்கள் தங்களது புகார்களை மனுவாக அளிக்க வந்திருந்தனர்.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திடீரென பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு வந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
மேலும் அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்வுக்கு திடீரென வந்த அமைச்சரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.